Thursday, August 20, 2009

ஆ....... - திகில் சிறு தொடர் [ என் முதல் முயற்சி ]

எங்கும் நிசப்தம்...
இருள் சூழ்ந்த அந்த இடத்தை, சொற்பமாக ஒளியூட்டி கொண்டு இருந்தது, அவளின் மொபைல் போன் மட்டுமே....
அவள்....
ஏதோ ஒரு அதிர்ச்சியில்.. இருப்பது போல்.... கால்களை சோபா மேல் மடித்து வைத்து கொண்டு...
கண்களில் ஒரு வித கலவரத்துடன்....
ஊரை விட்டு ஒதுங்கி இருந்த அந்த வீட்டினுள்.. ஏதோ நிகழ கூடாத ஒன்று நடந்து இருக்கிறது
அந்த நிகழ்வின் சாட்சிகளாக....
அவள் , அங்கு இருந்த நிசப்தம் மட்டுமே...
இப்பொழுது நான்....

அங்குலம் அங்குலமாக ஆழமாக பார்க்கிறேன்....
இருப்பது அவளின் கையில் உள்ள மொபைல் போன் மட்டுமே.....
அதன் ஒளியிலே... மெதுவாக நான் தேட தொடங்கினேன்...
அவள் அமர்ந்து இருந்த இடத்தில இருந்து சுமார் ஒரு 3 மீட்டர் தூரத்தில்... இன்னொரு ரூம் இருக்கிறது...

இருட்டில் துழாவி துழாவி சென்றேன்....
கீழே..ஏதோ பிசு பிசு என்று ஒட்டியது போன்ற ஒரு எண்ணம்...
குனிந்து பார்த்தால்... அது... அது... அது... சூடான ரத்தம்...


மெதுவாக குனிந்து பார்த்தால்... ரத்த ஆறு ஓடுவது நன்றாக தெரிகிறது....

மொபைல் போனின் வெளிச்சம்....இந்த அறைக்குள், இந்த எல்லையுடனே முடிந்து விட, என்னால் அந்த
ரத ஊற்றின் தொடக்கம் அறிய முடியவில்லை....
மெல்ல திரும்பினேன்....

அவள் இருந்த அறையில்......
எந்த ஒரு போராட்டம் நடந்து முடிந்த அறிகுறியும் இல்லாமல் அமைதியாகவே இருந்தது....
மெல்ல மெல்ல விஷயம் புரிய தொடங்கியது...

ஒரு கொலை நடந்து இருக்கிறது...
கொன்றவள் இவள்...
கொல்லப்பட்டவர்/வ்ள்????

...தொடரும்....

1 comment:

Sankaranarayanan said...

தொடரும் -means 'to be continued periodically'.