நேற்று இரவு
மணி 10:30 இருக்கும்...
என் 2 வயது மகன் என் மீது விளையாடி கொண்டு இருந்தான்..
அப்பா, இது என்னப்பா என்றான்...
ஜூஸ் கண்ணா - இது நான்
என்ன ஜூஸ் அப்பா ?? -அவன்
Grape ஜூஸ் கண்ணா - நான்
என்ன கிராப்ஸ் அப்பா?? --அவன்
ஏதோ ஒரு முடிவில்லா பாதையை நோக்கி நான் பயணிக்கிறேன் என்று புரிந்தது....
Black கிராப்ஸ் கண்ணா என்றேன்...
என்ன black அப்பா?
எனக்கு லேசாக கோவம் வந்தது..
பதில் சொல்லாமல் இருந்தேன்
சொல்லுப்பா என்ன black அப்பா??
பதில் தெரியாத காரணத்தால்...
Shravan கத்தி பேசாதே...நைட் ஆய்டுத்து....கத்தி பேசினால்
பக்கத்து வீட்டில் இருந்து கம்பு எடுத்து கொண்டு நம்மை அடிக்க வருவார்கள் என்றேன்....
பையன் மெதுவாக என் பக்கத்தில் வந்து... அதை கேட்டான்...
என்....அதனை கோவமும் தொலைந்து போனது...
என் போலவே ஒரு வீர திரு மகனை பெற்ற மகிழ்ச்சி....
ஒரு தன்மான தமிழனை பெற்ற உவகை...
சிரித்து கொண்டே...
அவனை அணைத்து கொண்டேன்...
அவன் கேட்டது......
"அப்பா ஓடி போய்டலாமா அப்பா...."
குழல் இனிது யாழ் இனிது என்பர் அவர் தம் மழலை சொல் கேளாதார்
No comments:
Post a Comment